தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ம் ஆண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-2023-ம் ஆண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7.88 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். இன்று தொடங்கிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நிறைவுபெறுகிறது. சென்னையில் 180 மையங்களில் 42,122 பேர் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,224 மையங்களில் தமிழகத்தில் 3,184 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. 4,20, 356 பெண்களும் 3,67,707 ஆண்களும் மற்றும் 1 பாலினத்தவர்களும் மொத்தம் 7,88,064 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 5338 தனித்தேர்வர்களும், மாற்றுத்திறனாளிகள் 5,835 பேரும், 125 சிறைவாசிக்களும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வுப்பணிக்காக 43,200 கண்காணிப்பாளர்கள், 1134 நிலைக்குழுக்கள், 3100 பறக்கும் படையினரும் பணியில் உள்ளனர். பொதுத்தேர்வு நடக்கும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மார்ச் -14 மொழிப்பாடம், மார்ச் -16 ஆங்கிலம், மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம், மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், மார்ச் 28 – வேதியியல், கணக்கியல், புவியியல், மார்ச் 30 – கணினி அறிவியல், ஏப்ரல் 5 – கணிதம், விலங்கியல் ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ம் ஆண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.