தருமபுரி : +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவியை காணவில்லை : விசாரணை நடத்திவரும் காவல்துறை

தருமபுரி மாவட்டம் கொவங்ககரப்பட்டி, வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது40). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு வினோதினி (17) உள்பட 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கட்டிட தொழிலாளியான கணவன்-மனைவி இருவரும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை மாரியப்பன் வேப்பமரத்தூரில் உள்ள தனது மாமியார் பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் மாரியப்பன் மூத்த மகள் வினோதினி வே.முத்தம்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் வினோதினி தேர்ச்சிய அடையவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று காலை பள்ளி வரை சென்றுவருவதாக கூறிவிட்டு வெளியே சென்றிருக்கின்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதுகுறித்து மாணவியின் தங்கை பெற்றோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே வேப்பமரத்தூருக்கு வந்த பெற்றோர் மாணவியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரியப்பன் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தருமபுரி : +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவியை காணவில்லை : விசாரணை நடத்திவரும் காவல்துறை

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட