திமுக முப்பெரும் விழா: Artificial intelligence (AI) தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி…!

திமுகவின் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், கருணாநிதியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பேச வைத்துள்ளனர்.சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்றுள்ளார். இந்நிலையில் விழாவின் முதல் வரிசையில் இரண்டு பெரிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன.இதன் மீது தொடக்கம் முதலே பெரிதும் ஆர்வம் இருந்தது. ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து கொண்டால் மற்றதில் யார் அமருவார் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் விழா தொடங்கிய நிலையில், ஸ்டாலினுக்கு அருகில் உள்ள இருக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியை அமர வைத்துள்ளனர்.

கருணாநிதி பேச்சு

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக கருணாநிதி பேசியது திமுக தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. தனக்கே உரிய பாணியில் ”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற பேசத் தொடங்கியதும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசுகையில், தந்தை பெரியார் வகுத்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக கட்சியை ஆட்சி பொறுப்பில் அமர செய்திருக்கும் தம்பி மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் நெஞ்சும் பெருமிதம் கொள்கிறது.

சிறப்பான முறையில் கழக ஆட்சி

ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான். 55 ஆண்டுகளாய் அயராது உழைக்கிறவர். திராவிட செம்மலாய், இந்தியாவின் முன்மாதிரி முதல்வராய் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் பாதையில் கழக ஆட்சியை அவர் மிகச் சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.இனமானம், மொழி மானம், சுயமரியாதை ஆகியவற்றை கண் போல் காக்கும் அவரது கடமையை கண்டு நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். வாழ்க பெரியார், அண்ணா புகழ், ஓங்குக திராவிட ஆட்சி என்று கருணாநிதி ஏஐ தொழில்நுட்பம் பேசினார். இதை கேட்ட கழகத்தினர் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதையடுத்து திமுக சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

திமுக முப்பெரும் விழா: Artificial intelligence (AI) தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்