18.வெஃகாமை
பறிர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
==========================================
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறில்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு (குறள் 180).
விளக்கம்
தமக்கு வரும் தீமையை எண்ணாமல் ஒருவன் பிறர் பொருளை விரும்பினால் அது அவனுக்கு அழிவைத் தரும். பிறர் பொருளை விரும்பாமை எனும் பெருமிதம் வெற்றியைத் தரும்.






