குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான்நல்காது ஆகி விடின்
குறள் விளக்கம்: ஏராளமான நீரை யுடைய பெரிய கடலும் மேகம்
கடலிலிருந்து நீரைக் கொண்டு மீண்டும் அதனிடத்தில் பெய்யாது விடுமானால், தன் வளத்தில் குறையும். அது போல, பரிசுத்த ஆவியின் பொழிவு நடை பெறாவிட்டால் உலகில் அனைத்துச் சிறப்புகளும் குறைந்துவிடும்.
திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் அப்போஸ்தலர் 22
“அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” என்றும், அப்போஸ்தலர் 2:17 “கடைசி நாட்களில் நாள் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.






