1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (குறள் 133)
விளக்கம்:
உயர்ந்த குடித்தன்மையை வெளிப்படுத்துவது ஒழுக்கமேயாகும். ஒழுக்கத்திலிருந்து தவறுதல் இழிந்த குடிப் பிறப்பாகிவிடும்.







