அண்மை செய்தி
ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், பிரிட்டன் பிரதமரை சந்தித்தார் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்தித்தார் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள், நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைப்பு ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல் நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… தமிழக அமைச்சரவையில் 3வது இடம் ஒதுக்கீடு!

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவையில் அவரது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள நபர்களுக்கும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்:
  • தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • புதிய அமைச்சர்களுக்கு ஏற்ப வரிசை எண் வெளியிடப்பட்டது
  • உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் அளிக்கப்பட்டிருக்கிறது

தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அமைச்சரவை மாற்றம் புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக அமைச்சரவையின் வரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தமிழக அமைச்சரவையில் முதலிடத்தில் இருக்கிறார். இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு இடம் அளிக்கப்படும். அந்த வகையில் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் 2வது இடத்தில் உள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதையடுத்து சமீபத்தில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே உள்ள விளையாட்டு துறை உடன் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சராக இருந்த போது உதயநிதி ஸ்டாலினுக்கு 10வது இடம் அளிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

முதல் 10 இடங்கள் யார், யார்

புதிய பட்டியலின் படி, 4வது இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 5வது இடத்தில் கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 6வது இடத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, 7வது இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 8வது இடத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,

அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்

9வது இடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், 10வது இடத்தில் நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இருக்கின்றனர். தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.ராஜேந்திரனுக்கு 19வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு 21வதுஇடம்

இவர் வசம் சுற்றுலா துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு 21வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவி.செழியனுக்கு 27வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அமைச்சராக எஸ்.எம்.நாசர்

இவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.எம்.நாசருக்கு அமைச்சரவையில் 29வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் வசம் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள், நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைப்பு

நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள்,

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… தமிழக அமைச்சரவையில் 3வது இடம் ஒதுக்கீடு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள், நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைப்பு

நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள்,

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின்