நன்னிலம் விவசாயி வீட்டில் பழமையான சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது62)என்பவரின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனை சீரமைப்பதற்காக குழாய் அருகில் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டினார். அப்போது மண்வெட்டிபட்டு உலோக சத்தம் வந்துள்ளது.
பதறிபோன அவர், சிறிய வடிவிலான உலோகப்பெட்டி புதைந்து இருந்ததை கண்டார். அதை திறந்து பார்த்தபோது பழமையான பெருமாள் சிலை ஒன்று, ஆண்டாள் சிலை இரண்டு, கருடன் சிலை ஒன்று, தெய்வ சிலை ஒன்று, உலோகத்தால் ஆன ருத்ராட்சம் ஐந்து, மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை மற்றும் வட்ட வடிவில் தாளம் 2 போன்றவை இருந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக செல்வராஜ் பேரளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நன்னிலம் வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அனைத்தும் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் என்றும், இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தொல்லியல் துறையினர் இந்த சிலைகளை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகே சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது அதன் உண்மையான மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

நன்னிலம் விவசாயி வீட்டில் பழமையான சாமி சிலைகள் கண்டெடுப்பு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட