மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் பொது மக்கள் விழிப்புணர்வுக்காக நாம் தினந்தோறும் சந்திக்கும் நோய்கள் பற்றிய சந்தேகங்கள் மற்றும் அதன் விளக்கம் கொண்ட தகவல் ஏட்டினை வெளியிட்டார். இந்நிகழ்வில் முதன்மைச் செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 101:செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது விளக்கம்: தமக்கு எந்த





