பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்குமா ?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ தலைமையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து, இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க பணித்துள்ளார். இதில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உயர்மட்டக் குழு இந்தியா-பாகிஸ்தான் ராஜீய உறவுகள் உட்பட அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து விளையாட்டையும், அரசியலையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதையும், இந்தியாவில் அரசியல் சூழ்நிலை பாகிஸ்தான் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், ஊடகங்கள், பாகிஸ்தான் மக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பானதுதானா போன்றவற்றையும் ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளது.

இந்தக் குழுவின் முடிவின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்குமா என்பதை பாகிஸ்தான் பிரதமர் தீர்மானிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரியமும் (பிசிசிஐ) ஏற்கெனவே உலகக் கோப்பைக்கான அட்டவணையை அறிவித்து விட்டனர். அக்டோபர் 5-ம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்குகின்றது. இரு நாடுகளுக்கு இடையேயும் பதற்றமான உறவுகள் இருந்து வருவதால் பாகிஸ்தான் அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி, இந்தியா வரும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் அஹ்சான் மஜாரி, மர்யன் ஔரங்கசீப், ஆசாத் மஹ்மூத், அமின் உல் ஹக், குவாமர் ஜமான், முன்னாள் தூதரக அதிகாரி தாரிக் ஃபாத்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உயர்மட்டக் குழு ஒன்று இந்தியா வந்து பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் வீரர்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகுதான் அனுமதி குறித்த விவகாரம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் பாகிஸ்தான் வாரிய பொறுப்புத் தலைவரும், தலைமை நடைமுறை செயலதிகாரியும் கலந்து கொண்டு இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் வந்து ஆட மறுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் மட்டும் ஏன் ஆட வேண்டும் என்ற கேள்வியை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 1,25,000 பேர் அமர்ந்து பார்க்கும் உலகின் பெரிய ஸ்டேடியம் ஆகும் அகமதாபாத். இங்குதான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணி 2 பயிற்சிப் போட்டிகளில் ஆடுகிறது. பிறகு நெதர்லாந்து மற்றும் இலங்கையுடன் முதல் 2 உலகக் கோப்பை போட்டிகளில் மோதுகிறது. பாகிஸ்தான் அணி சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஆகிய மைதானங்களிலும் பாகிஸ்தான் விளையாடுகிறது.

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் அமைத்துள்ள குழுவின் ஆய்வறிக்கையின் படியே முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்குமா ?

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.