பாஜகவுடன் கூட்டணியா…? முறிவா…? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை:
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மாலை 3.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.மாளிகையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவுடன் தற்போது கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்து இருந்ததது. இதன்பிறகு பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதனால், மீண்டும் சமாதன முயற்சி நடப்பதாக சொல்லப்பட்டது. இத்தகைய சூழலில், அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது. கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பாஜகவுடன் கூட்டணியா…? முறிவா…? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட