தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ், ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து சென்னை, பெரம்பூரில் இன்று காலை 12.30மணியளவில் “அவசர பத்திரிகையாளர்கள் சந்திப்பு” நடைபெற்றது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் ஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் எஸ்.வெங்கடேச பெருமாள், மாநில துணைத் தலைவர் கே.காண்டீபன், மாநில துணைச் செயலாளர் எம்.ஏ.காஜா முகைதீன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







