
புதுச்சேரி ஜிப்மரின் புறநோயாளிகள் பிரிவில் உள்ள பொது மாதிரி சேகரிப்பு மையம் மற்றும் ரத்தப் பரிசோதனை மையத்தின் அலுவலக நேரம், நோயாளியின் வசதியைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த மையங்கள் காலை மணி 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சனிக்கிழமையில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். இதன் மூலம் பெருமளவு நோயாளிகள் பயன்பெறுவதோடு காத்திருப்புக் காலமும் குறையும். விரைவாக பரிசோதனை முடிவுகளையும் பெற முடியும்.







