பெருநகரசென்னைமாநகராட்சிஆணையாளர்டாக்டர்ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்நொச்சிக்குப்பத்தில்நடைபெற்றுவரும்நவீனமீன்அங்காடிஅமைக்கும்பணிகள்பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் செயல்பாட்டில் உள்ள பூங்காக்கள், மியாவாக்கி காடு, பொது கழிப்பிடங்கள்  ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் நொச்சிக்குப்பத்தில் நடைபெற்று வரும் நவீன மீன் அங்காடி அமைக்கும் பணிகள் ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அடையாறு மண்டலத்தில், திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிர்ப்புறம் சாலையில் உள்ள தீவுப் பூங்கா, திருவான்மியூர் பேருந்து நிலையம் சந்திப்பு, கஸ்தூரிபாய் நகரில் உள்ள பூங்காக்கள், திருவான்மியூரில் இந்திரா நகர் ரயில் நிலையம் முதல் கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் வரையிலான மியாவாக்கி எனும் அடர் வனம், மலர் மருத்துவமனை எதிரில் எல்.பி.சாலையில் உள்ள தீவுப் பூங்கா,மல்லிப்பூ நகர் பின்பகுதியில் உள்ள கோட்டூர் புரம் பூங்கா, எம்.ஆர்.சி.நகர் பூங்கா   ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பூங்காக்கள் மற்றும் மியாவாக்கி எனும் அடர் வனத்தினையும் தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அடையாற்றில் கானு நகர் பகுதியில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பு  குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம் நொச்சிக்குப்பத்தில், ரூபாய் 15 கோடி மதிப்பில் 360 கடைகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடிப் பணிகளைப் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் அறிவுறுத்தினார். 

மேலும் லூப் சாலையில் பயன்பாட்டில் உள்ள பொதுகழிப்பிடத்தினையும், இராயபுரம் மண்டலத்தில் சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலையில் பயன்பாட்டில் உள்ள பொது கழிப்பிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் சிவானந்தா சாலையில் இரயில் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பராமரிப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது, துணை ஆணையர் (கல்வி) திருமதி. ஷரண்யா அறி, இ.ஆ.ப., வட்டார துணை ஆணையர்கள் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

பெருநகரசென்னைமாநகராட்சிஆணையாளர்டாக்டர்ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்நொச்சிக்குப்பத்தில்நடைபெற்றுவரும்நவீனமீன்அங்காடிஅமைக்கும்பணிகள்பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400