பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர்
மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணிகள் அமலாக்குவதற்கான திட்டக்கூறு தொடர்பான பொதுமக்கள் பங்களிப்புக் கூட்டம் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78க்குட்பட்ட அறிஞர் அண்ணா மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், சச்சிதானந்தம் தெரு, கொசப்பேட்டை, சென்னை-12 என்ற முகவரியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) அவர்கள் மற்றும் வட்டார துணை ஆணையாளர்கள் (வடக்கு (ம) மத்தியம்) அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தப் பங்களிப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் வருகைபுரிந்து
தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






