பொது இடத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை : 4 பேர் கைது…

சென்னை: சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் 4 பேர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து மது அருந்தி கொண்டு ரகளை செய்வதாக கிண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த ஏட்டு பாஸ்கர், சம்பவ இடத்துக்கு சென்று மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்த 4 பேரையும் எச்சரித்து அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்.அதற்கு மறுத்து போலீஸ் ஏட்டு பாஸ்கரிடம் அவர்கள் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து பாஸ்கரை அடித்து உதைத்தனர். இதில் போலீஸ் ஏட்டு பாஸ்கரின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் சைதாப்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சுதர்சன் (26), சுதாகர் (35), முருகானந்தன் (31), காமராஜ் (49) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

பொது இடத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை : 4 பேர் கைது…

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400