போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பியவர் உயிரிழப்பு….

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர், பம்மல் நல்லதம்பி தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் இவரது வீட்டின்அருகே வசிக்கும் விஜயலட்சுமி என்பவரது வீட்டில் நகைகள் திருடப்பட்டன.

எம்ஜிஆர் நகர் போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீதரை நேரில் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீதர் 2 நாட்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், நேற்று முன்தினம் அவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். மீண்டும் நாளை வரும்படி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதர் நேற்று மதியம் மனைவி மஞ்சுவுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். பின்னர், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டுக்குச் சென்ற பிறகு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு எரிச்சலாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இறந்துள்ளார். விசாரணை என்ற பெயரில் போலீஸார் தாக்கியதால்தான் ஸ்ரீதர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்ரீதர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அவர் `பி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். திருட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை மட்டுமே நடத்தினோம். அவரை தாக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பியவர் உயிரிழப்பு….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.