மணிப்பூர் மாநில அரசை கலைக்கவேண்டும் ! கலாநிதி வீராசாமி எம்.பி கடிதம்…

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மணிப்பூரில் நடைபெறும் கலவரங்களை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியும், அரசியல் சட்டம் 355வது பிரிவின் கீழ் மணிப்பூர் மாநில அரசை கலைத்திடக் கோரியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :
கடந்த மே மாதம் 3ஆம்தேதியிலிருந்து, வடகிழக்கு மாகாணமான மணிப்பூரில், சமவெளிப்பகுதியில் வாழும் மெய்தி என்னும் மெஜாரிட்டி இன மக்களுக்கும் மலைப் பகுதிகளில் மைனாரிட்டி எண்ணிக்கையில் வாழும் குக்கி இன பழங்குடி மக்களுக்கும், மிகவும் பயங்கரமான அளவில் கலவரம் நடந்து வருகின்றது. இந்த கலவரத்துக்குக் காரணம், மெய்தி இன மக்களின் நீண்டகால கோரிக்கையான அவர்களது இனத்தை, இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் எஸ்.டி பிரிவாக பழங்குடி மக்களின் பிரிவாக அறிவிக்க வேண்டும் என்பதை ஒட்டியதாகும்.

கடந்த ஏப்ரல் மாதம், மணிப்பூர் உயர் நீதிமன்றம் அதன் நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போது, அம் மக்களின் கோரிக்கையின் மீது தக்க நடவடிக்கையை ஒரு மாதத்திற்குள் எடுக்கும்படி ஆணையிட்டுருந்தது. மணிப்பூரில் வாழும் பழங்குடி இன மக்கள், இக்கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர் மணிப்பூர் அனைத்து பழங்குடி இன மாணவர்கள் அமைப்பு, இக்கோரிக்கையை எதிர்த்து, மே மாதம் 3ஆம் நாள் ஒரு மாபெரும் ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலம் முடிகின்ற தருணத்தில் மெய்தி இன மக்களுக்கும், குக்கி இன மக்களுக்கும் இடையே கலவரம் உருவாகி, வன்முறை வெடித்தது. இதுவரை சுமார் 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 300க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்ததையும் ஆயிரக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்ததையும் எண்ணிலடங்கா சர்ச்சுகளும், கோயில்களும் இடிக்கப்பட்டதையும் அறிந்தும் இதற்குக் காரணமான மாநில அரசு, எந்த தீர்வும் காணாமல் ஒதுங்கி நிற்கின்றது. இன்னமும் இந்த கொடுமைகள் வளர்ந்து மிசோரம் மாநிலத்திலும் பரவத் தொடங்கியுள்ளது, கடந்த சில நாட்களாக, மணிப்பூர் மாநில தலைவர்கள், பிரதமரைச் சந்தித்து, உடனடியாக அவர் இதில் தலையிட வேண்டும் என்று பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கோரியுள்ளோம், அமைதி உண்டாக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நாட்களைக் கடத்தி வருவதால், ஒரு வேளை அரசுக்கே தீர்வு காண விருப்பம் இல்லையோ, இந்த கலவரம் தொடர்ந்து நடந்திட வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகின்றதோ, என்று அச்சம் ஏற்படுகிறது.
சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத் துருப்புகளும், மற்றும் துணை இராணுவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மணிப்பூரில் உடனடியாக குவிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மாநிலமெங்கும் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. மோசமான நிலை இருக்குமானால், தடையை மீறும் மக்களைக் கண்டதும் சுடுவதற்கு, இராணுவத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 14ஆம் தேதி நடந்த வன்முறையில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், 14 பேர் காயமுற்றதாகவும் தெரிகிறது, மணிப்பூர் தலைநகரில் உள்ள மருத்துவர்களும், உயர் அதிகாரிகளும், இறுதியாக நடந்த கலவரம் மிகக் கொடூரமாக இருந்ததாகவும், கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படாத வகையில் அவர்களது உடல்கள் சிதைக்கப் பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அங்கே ஆட்சி செய்வதோ பி.ஜே.பி. தலைமையிலான இரட்டை என்ஜின் மத்தியிலும் மாநிலத்திலேயும் பி.ஜே.பி. ஆட்சிதான் நடந்து வருகிறது கடந்த ஆண்டு, மார்ச் மாதத்தில் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நோங்தோம்பம் பிரேன் சிங் ஆட்சிதான் நடைபெறுகின்றது. ஆனாலும் மணிப்பூர் மக்கள் அவர்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், அவர்கள் எல்லோருமே இப்போது துயரத்தில் உள்ளனர்.
பி.ஜே.பி-யின் டபுள் என்ஜின் அரசாங்கங்கள் முழுவதுமாகவே தடம் புரண்டு விட்டன அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் எல்லா இன, சாதி மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் பிரதமர் தனது மௌனத்தைத் தொடர்கின்றார். அடுத்து நவம்பர் 2023-ல் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தை நடத்திக் கொண்டுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகமும் அங்கே ஒரு குழுவை அனுப்பி நிலைமையை கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகளை இன்னமும் எடுக்கவில்லை.
இந்த கலவரத்தில் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களை, சகோதரர்களை இழந்த இளம் சகோதரிகளைக் காணும் போது நெஞ்சம் பதறுகிறது.
உள்துறை அமைச்சர், தங்கள் கவனத்தை அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின் மீது ஈர்க்கின்றேன். அரசியல் சட்டத்தின் 355வது பிரிவு, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களையும் வெளிநாட்டு படையெடுப்பில் இருந்து பாதுகாப்பதும், ஒவ்வொரு மாநிலத்தையும் உள்நாட்டுக் குழப்பங்கள் ஏதும் இன்றி பாதுகாப்பதும் ஒன்றிய அரசின் கடமை. அனைத்து மாநிலங்களிலும், அரசியல் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிப்பதும் ஒன்றிய அரசின் கடமை என்று கூறுகிறது. ஆனால் மணிப்பூரில் தற்போது நடப்பது என்ன என்பதைப் பாருங்கள் 355வது பிரிவின்படி அந்த மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படுவது அவசியம் இல்லையா? மணிப்பூரின் முக்கிய அதிகாரிகள் ஒன்றிய அரசு அவசரகால சட்டப்படி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றும் ஆனால் இது குறித்து அறிவிப்பு ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறுகின்றனர். இது உண்மை எனில், ஒன்றிய அரசு, தனது கடமையில் இருந்து தவறிய மாநில அரசை இன்னுமும் ஏன் நீக்கவில்லை?
மேற்கூறிய காரணங்களை அமைச்சர் அமித்ஷா ஆய்ந்து, அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின் கீழ் மணிப்பூர் மாநில மக்களின் உயிரையும், உடமைகளையும் காக்க தவறிய மாநில அரசை டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவருவதற்கு ஏற்ப ஆணைகள் வெளியிடும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்

மணிப்பூர் மாநில அரசை கலைக்கவேண்டும் ! கலாநிதி வீராசாமி எம்.பி கடிதம்…

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்