இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-160, சௌரி தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் (CSR Fund) கீழ், லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 இலட்சம் மதிப்பிலான 2 கலர் டாப்லர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் (Color Doppler Ultrasound machine) மற்றும் 1 மல்டிபாரா மானிட்டர் (Multipara Monitor) ஆகிய மருத்துவ உபகரணங்களை செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஆர்.ராஜசேகர பாண்டி, மண்டலக்குழுத் தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் டி.எம். பிருந்தா ஸ்ரீ, அ.சாலமோன், சி.துர்கா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை குறள்





