சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து 2 ஆண்டுகளாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் டி. வில்சனை தகவல் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பாக தொடர்பு கொண்டு கோரிக்கை தொர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தக் கோரி 4 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் உதவித் தொகை கேட்டு 1லட்சம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகளை வருவாய்த்துறை, மாற்றுத்திறளாளிகள் நலத்துறை என இரு துறைகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும்.
உலக வங்கி உதவியோடு மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே 66 லட்சம் முறைகேடு நடந்துள்ளது.
இதனை வெளியே கொண்டுவந்த திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அதிகாரி தங்கவேல் மீது நடவடிக்கை எடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நீதி சமத்துவத்திற்கான அரசு என்று கூறிவரும் தமிழக அரசு இதனை கவனிக்கவில்லையா? இதுதொடர்பான முறையான விசாரணை தேவை.
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த திமுக ஆட்சியில் கமிட்டி அமைகப்பட்டது. இந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டத்திற்கு மிகப்பெரிய தொகை ஒதுக்கீடு செய்து ஆடம்பரமாக செலவு செய்யப்படுகிறது. இதிலும் முறைகேடு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் பெயரை கூறி இவ்வாறு செய்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 31ம் தேதி முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினோம். மாற்றுத்திறனாளிகளுக்கான மானிய கோரிக்கையின் போது எங்களது கோரிக்கைகளை 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே 2வது வருவாய் அதிகம் உள்ள மாநிலம் ஆகும். ஆனால் 6வது இடத்தில் உள்ள ஆந்திர மாநிலம் மாற்றுத்திறனாளிகளின் முதல் பிரிவிற்கு ரூ, 6,000, 2வது பிரிவிற்கு ரூ.10,000, 3வது பிரிவிற்கு ரூ.15,000 என்று வழங்குகிறது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரூ.5,000, , 4,500 என்று வழங்கப்படுகிறது. தெலுங்கானாவில் . 4,016 வழங்கப்படுகிறது. ஆனால் வருவாயில் நாட்டின் இரண்டாம் இடம் உள்ள மாநிலமான தமிழகத்திடம் நாங்கள் ரூ.6000ஆக உயர்த்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிககை என்று விளக்கமாக தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் துறையில் நடந்த முறைகேடுகள, விடுத்துள்ள கோரிக்கைகள் என்ன? விவரிக்கிறார் சங்கத்தின் மாநில தலைவர் டி.வில்சன்
சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே ரூ.6000&ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு






