‘மின்னல் வேகம், வேக்சினுக்கும் பலனில்லை..’ வல்லரசுகளை திணறடிக்கும் டெல்டா கொரோனா.. ஆபத்தானது ஏன்?

வாஷிங்டன்: இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் மின்னல் வேகத்தில் பரவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா வேகமாகப் பரவுவதால் அது பற்றிய ஆய்வுகளும் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.

சீனாவில் கடந்த 2019இல் கொரோனா வைரஸ் பரவித் தொடங்கியது முதல், அது தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும், அவை அனைத்தையும்விட இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மின்னல் வேகத்தில் பரவும் இந்த டெல்டா கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகையைவிட 40% வரை வேகமாகப் பரவுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மின்னல் வேகம்

அதேபோல வேக்சினின் தடுப்பாற்றலும் டெல்டா கொரோனாவுக்கு எதிராகக் கணிசமாகக் குறைவது பல்வேறு ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி 2 டோஸ் வேக்சின் எடுத்தவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் மிக வேகமாகப் பரவுவதாகக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், பல்வேறு நாடுகளிலும் டெல்டா கொரோனா தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டெல்டா கொரோனா குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, சளி, பெரியம்மை ஆகியவற்றைவிட வேகமாகப் பரவுவதாகத் தெரிவித்துள்ளது.

அமினோ ஆசிட்

டெல்டா கொரோனா ஏன் இப்படி மின்னல் வேகத்தில் பரவுகிறது என்பதைக் கண்டறிய உலகெங்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. டெல்டா கொரோனா வைரசில் உள்ள ஒரு வகை அமினோ ஆசிட் காரணமாகவே, அது இந்தளவுக்கு வேகமாகப் பரவுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மனித செல்களில் கொரோனா வைரசால் எளிதாகத் தாக்க முடிகிறது. ஆல்பா கொரோனா வகைகளிலும் இதே போன்ற மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இருப்பினும், இதில் வேறு வகையான அமினோ ஆசிட் உள்ளது.

P681R பிறழ்வு

இதனை கொரோனா P681R பிறழ்வு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த P681R பிறழ்வு காரணமாக ஸ்பைக் புரதத்தால் ஆல்பாவை விட டெல்டா கொரோனா துகள்களால் மனித செல்களை எளிதாகத் தாக்க முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். இதனால் தான் ஆல்பா கொரோனா வகையைக் காட்டிலும் டெல்டா வகை வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த P681R பிறழ்வை நீக்கிய போது டெல்டா கொரோனா பரவும் வேகம் குறைந்துவிட்டது. இதனால் டெல்டா வேகமாகப் பரவு இந்த P681R பிறழ்வு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அது மட்டும் காரணமில்லை

ஆனால், இதை சில ஆய்வாளர்கள் மறுத்தும் உள்ளனர். உகாண்டா நாட்டில் முன்பு கண்டறியப்பட்ட சில உருமாறிய கொரோனா வகைகளில் இந்த P681R பிறழ்வு இருந்துள்ளது. ஆனால் அது இந்த டெல்டா கொரோனாவைப் போல வேகமாகப் பரவவில்லை. இந்தியாவில் கண்டறியப்பட்ட மற்றொரு கொரோனா வகையான காப்பா வகையிலும் இந்த P681R பிறழ்வு இருக்கிறது. ஆனால், இது டெல்டா கொரோனா போல வேகமாகப் பரவவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா கொரோனாவில் உள்ள L452R மற்றும் D6146 மாற்றங்கள், மனித செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த உதவுகிறது. டெல்டா கொரோனாவிலேயே பல்வேறு மாற்றங்கள் உள்ளதால், இந்த ஒரு காரணத்தால் தான் அது வேகமாகப் பரவுகிறது என ஆய்வாளர்களால் குறிப்பிட்டு ஒரு காரணத்தைச் சொல்ல முடியவில்லை

நாசியில் வைரஸ்

சீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் முக்கியமான ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். டெல்டா கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்படும்போதும், அவரது உடலில் 5 நாட்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது. ஆனால், அவரது நாசி உள்ளிட்ட பகுதிகளில் 2ஆம் நாளிலிருந்தே வைரஸ் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதாவது ஒருவர் தனக்கு கொரோனா இருக்கிறது என்பதை உணரும் முன்னரே, அவர் மற்றவருக்குப் பரப்பத் தொடங்குகிறார். ஒரு நபர் எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்புகிறார் என்பது R Factor என்று அழைக்கப்படும். சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் R Factor 2 முதல் 4 வரை இருந்த நிலையில் டெல்டா கொரோனாவின் R Factor 6.4ஆக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

வேக்சின் தடுப்பாற்றல்

டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் குறைவது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவுக்கு எதிராக ஆஸ்ட்ரா ஜெனிகா வேக்சின் தடுப்பாற்றல் 64% ஆகக் குறைகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா எதிராக 90 வரை பாதுகாப்பை அளித்த பைசர் வேக்சின், டெல்டா கொரோனாவுக்கு எதிராக 64% வரை மட்டுமே பாதுகாப்பைத் தருகிறது. இவை மட்டுமின்றி மாடர்னா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் என அனைத்து வகையான வேக்சின் தடுப்பாற்றலும் டெல்டா கொரோனாவுக்கு எதிராகக் கணிசமாகக் குறைகிறது. மேலும் பைசர் வேக்சின் தடுப்பாற்றல், 90 நாட்களில் குறையத் தொடங்குகிறது.

என்ன வழி

மேலும் 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும் அவர்களது நாசி பகுதியில் அதிகளவில் டெல்டா கொரோனா இருக்கிறது. அதாவது அவர்கள் டெல்டா கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றாலும்கூட, வேக்சின் போட்டுக் கொண்ட பின்னரும் அவர்கள் மூலம் டெல்டா கொரோனா பரவுகிறது. எனவே, ஒரு நாட்டிலுள்ள அனைவரும் வேக்சின் போட்டுக் கொள்ளும் வரை டெல்டா கொரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்

‘மின்னல் வேகம், வேக்சினுக்கும் பலனில்லை..’ வல்லரசுகளை திணறடிக்கும் டெல்டா கொரோனா.. ஆபத்தானது ஏன்?

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்