புதுச்சேரி:
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் கூட்டியுள்ளார். அதில் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழகம், அந்தமான் நிகோபார் ஆகிய பகுதிகளில் இருந்து முதல்வர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரியை பொறுத்தவரையில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனும் அழைக்கப்பட்டுள்ளார் இந்தக் கூட்டத்தில் முக்கிய நோக்கம் மாநிலத்தின் வளர்ச்சி, கட்டமைப்புகள், நிதிப் பற்றாக்குறை, மருத்துவமனைகள், புதிதாக கட்டப்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமில்லாமல் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் பேசப்படும்.
முதல்வர் ரங்கசாமிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பேசுவதற்கான முக்கியமான இடம் தென்மாநில முதல்வர்கள் மாநாடு. தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புதுச்சேரி முதல்வர் புறக்கணிக்கப்போகிறார். அதில் கலந்து கொள்வதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை என்று தெரிகிறது.
துணை நிலை ஆளுநர் கலந்துகொண்டு பொதுவான பிரச்சினைகளை பேசுவார். மாநில பிரச்சினைகளை முன்வைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வர் ரங்கசாமிதான் செய்ய வேண்டும். இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் இழந்துவிட்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று இங்கிருந்தே கேட்டால் மத்திய அரசு வழங்காது. புதுச்சேரிக்கு நிதிநிலை அதிகமாக வருகிறது. மாநிலத்தை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பு இருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றால் மிக வேகமாக திட்டங்கள் நிறைவேற்ற முடியும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி
சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது






