லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி… தொடர்புடைய அதிகாரிகளையும் கைது செய்ய – மே பதினேழு இயக்கம் வலியுறுத்தல்

மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை அமலாக்கத்துறையை சேர்ந்த அங்கித் திவாரி எனும் அதிகாரி, திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரிடம் மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். அப்போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்செயல், மோடி அரசால் ஏற்கனவே தவறாக பயன்படுத்தப்பட்டு வரும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடப்பதையே காட்டுகிறது.சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை, ஒன்றிய அரசை ஆளும் பாஜகவுன் துணை அமைப்பாக செயல்பட்டு வருவதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
பாஜகவிற்கு நன்கொடை வழங்காத பெரு நிறுவனங்களை மிரட்டி பணம் பரிப்பதற்கும், மோடி அரசினால் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. லஞ்சம் ஊழலில் திளைக்கும் பாஜகவின் எம்பி எம்எல்ஏக்களையோ, பெரு முறைகேடுகளில் ஈடுப்பட்ட நிறுவனங்களையோ, மோடிக்கு நெருக்கமான அம்பானி, அதானி போன்றவர்களையோ அமலாக்கத்துறை கண்டுகொண்டதே இல்லை.இப்படி ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவரை அணுகிய அங்கித் திவாரி, கடந்த 2018ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுத்து முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் அலுவலகம் கூறியதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 3 கோடி கேட்டு மிரட்டியுள்ளார்.
பின்னர் திண்டுக்கல் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து பொறி வைத்து பிடித்துள்ளனர். அங்கித் திவாரி வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை சோதனையிட சென்ற போது, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பின்பு அங்கித் திவாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டும் சோதனையிட்டுனர். சோதனையின் போதே துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமலாக்கத் துறையின் சென்னை அலுவலகத்தை சோதனையிடக்கூடும் என்று சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தையும் பூட்டி காவல் இருந்துள்ளனர். இதே அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டதை இவ்வேளையில் நினைவுகூர வேண்டும்.
அங்கித் திவாரியின் வாக்குமூலம் மற்றும் தற்போதைய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையையும், சோதனைகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அங்கித் திவாரியின் பின்னணியில் செயல்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதோடு, அச்சமின்றி அவர்கள் அலுவலகங்களை சோதனையிட வேண்டும். குறிப்பாக, இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் தொடர்பு பற்றிய உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இதேபோல் இராஜஸ்தானில் இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் 17 இலட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டி பணம் பெரும் போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
எனில், இந்த வலைப்பின்னல் பற்றிய உண்மை கொண்டுவரப்பட வேண்டும்.
அமலாக்கத்துறை புனிதமான அமைப்பு என்பது போன்ற பிம்பத்தை அண்ணாமலை, நாராயணன் போன்ற பாஜகவினர் உருவாக்கி, அவர்களுடைய நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிவித்து வந்துள்ளனர். இது அமலாக்கத்துறைக்கும் பாஜகவுக்கும் உள்ளார்ந்து இருக்கும் தொடர்பை காட்டுகிறது. எனில், இது போன்ற மிரட்டி லஞ்சம் பெறுவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகளை பாஜகவினர் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இலஞ்சம் ஒழிப்புத்துறை இதனையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பாஜகவின் மூத்த தலைவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
ஒன்றிய மோடி அரசினால் ஏவல்துறையாக பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை தனது தனித்தன்மையை இழந்ததன் மூலம் லஞ்சமும் ஊழலும் திளைக்கும் துறையாக மாறியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை கலைக்கப்பட வேண்டும். அதிகார குவிப்பை மேற்கொள்ளும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும் வரை இதுபோன்ற ஒவ்வொரு நிறுவனமும் சீரழிக்கப்படும். பாசிசத்திற்கு துணைபோகும் துணை அமைப்புகளாக மாறுவதற்கு முன்பு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி… தொடர்புடைய அதிகாரிகளையும் கைது செய்ய – மே பதினேழு இயக்கம் வலியுறுத்தல்

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்