தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சைதை பகுதி தலைவராக ஜேகே தேர்வு செய்யப்பட்டார். வருகிற மே 5ம் தேதி அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தலைவர் ஜேகே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் செயலாளர், கூடுதல் செயலாளர், சங்க காப்பாளர் மற்றும் ஆலோசகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.






