வி.சி.க. அறச்செல்வம் என்ற தருமலிங்கம் காலமானார் : தொல்.திருமாவளவன் வருத்தம்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அறச்செல்வம் என்கிற தருமலிங்கம் காலமானார். அவரின் இறப்பு குறித்து அக்கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிறுப்பதாவது :-

கட்சியின் மேனாள் அரசியல் தலைமை குழு செயலாளர் தோழர் அறச்செல்வம் என்கிற தருமலிங்கம் (95) அவர்கள் காலமானார் என்பதையறிந்து மிகவும் வருந்துகிறேன். நாடாளுமன்ற த் தேர்தலையொட்டி கர்நாடகாவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பெங்களூரு வந்துள்ள நிலையில், இன்று காலையில் தோழர் அறச்செல்வம் அவர்களின் அன்பு மைந்தர் ஞானபாரதி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். உடனே புறப்பட்டு வர இயலாமைக்கு எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் ரவிகுமார், துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழேந்தி ஆகியோர் நேரில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். தோழர் அறச்செல்வம் அவர்கள் முற்போக்கான சிந்தனையாளர். இடது சாரி இயக்கத்திலிருந்து மக்கள் பணியாற்றியவர். குறிப்பாக, சிபிஐ (எம்.எல்- விடுதலை)இயக்கத்தின் முன்னணி தோழர்களான அமல்ராஜ், ஐ.பால்ராஜ், ஞா.தேவராஜ், பேரா. கல்யாணி, துரை.ரவிகுமார் போன்றோருடன் இணைந்து வெண்மணி படுகொலைக்கு எதிராக மக்களைத் திரட்டி வெகுசன போராட்டங்களில் பங்கேற்றவர். தீவிரமான தமிழ்த்தேசியப் பற்றாளர். பிற்காலத்தில், பாமகவில் இணைந்து சிலகாலம் பணியாற்றினார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையேற்று செயல்பட்டார். தோழர் உஞ்சை அரசன் போன்ற இடதுசாரி சிந்தனைகளை உள்வாங்கிய பல ஆளுமைகளை கட்சிக்கு அறிமுகப்படுத்தியவர். வயது மூப்பிலும்கூட சோர்வின்றி, மிகுந்த ஊக்கமுடன் கட்சியின் அனைத்துப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கேற்றவர். அண்மைக்காலமாக, நடமாட்டம் குறைந்து படுக்கையிலிருந்தார். தனது இறுதிமூச்சு வரையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் மாமேதை கார்ல்மார்க்ஸ் ஆகிய கொள்கை ஆசான்களின் வழியில் தடம் மாறாமல் உறுதிப்பாடு மிக்கவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடுத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வி.சி.க. அறச்செல்வம் என்ற தருமலிங்கம் காலமானார் : தொல்.திருமாவளவன் வருத்தம்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.