வெயிலின் தாக்கத்தை குறைக்க நிழல் பந்தல்கள் அமைத்தல் : டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்

கோடை வெயிலின் தாக்கத்தினை முன்னிட்டு, வாகன ஓட்டிகளின் நலனுக்காக முதற்கட்டமாக 10 போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதையொட்டி, கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ரிப்பன் கட்டட சந்திப்பு, ராஜா முத்தையா சாலை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தலினை இன்று பார்வையிட்டு வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது :

கோடை வெயிலின் தாக்கத்தினை முன்னிட்டு, பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் நலனுக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக முதற்கட்டமாக 10 போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் கண்டறியப்பட்டு அங்கு காவல்துறை உதவியுடன் நிழல்  பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பந்தல்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு பெரிய வாகனங்கள் செல்லும் வகையில்
5.30 மீ. உயர மைல் ஸ்டீல் கம்பிகளின் கட்டுமானத்துடன், மேலே போடப்படும் போரஸ் துணி கீழே விழாதவண்ணம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக மண்பானைகளில் குடிநீர் வைக்கப்பட்டு தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 34,000 தெருக்கள் உள்ளன.  முதற்கட்டமாக பேருந்து சாலைகள், முக்கிய சந்திப்புகள், அதிக போக்குவரத்து இருக்கக்கூடிய சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் இந்த நிழல் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் தொடர்ச்சியாக, மழைக்காலங்களில் இதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு, மேற்புறத்தில் ஃபைபர் அமைப்புகள் போடப்படவும் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சில வாகன ஓட்டிகளின் வேண்டுகோளுக்கிணங்க, நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

வெயிலின் தாக்கம் 28ஆம் தேதி வரை இருக்கும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மாநகராட்சிப் பகுதிகளில் 199 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையில் 299 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.   இதுவரை 1,44,527 நபர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து நிழல் பந்தல்கள் அமைக்க விருப்பம் தெரிவிக்கும் தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தலைமைப் பொறியாளர் எஸ். ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கத்தை குறைக்க நிழல் பந்தல்கள் அமைத்தல் : டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.