சென்னை:
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்குப் புகழுரை மட்டுமே உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். மரபு மீறி வேளாண் பட்ஜெட்டில் புகழுரையை அமைச்சர் வினோத் வாசித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் திமுக அரசின் திட்டங்களுக்குத் தவெக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது
பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் இல்லை. மேகதாது குறித்து நாளை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகரிடம் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான் என அவர் கூறினார். விவசாயிகள் நலனுக்கான எந்த அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளைத் தவெக அரசு வஞ்சித்துவிட்டது.
மேகதாது குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்க மறுக்கிறார். முதலமைச்சர் விஜய் எப்போது வாய் திறப்பார் என விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக எப்போதும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இருக்கும். திமுகவின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பதிலளிக்க வேண்டும். காவிரி – மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்






