ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் : எல்லையில் நிலைமை சீராக உள்ளதால் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடப்போம்…

எல்லையில் தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சர் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது சீன வெளியுறவு அமைச்சர், “இந்திய – சீன எல்லையில் தற்போதைய சூழலில் நிலவரம் சீராக இருக்கிறது என்றும் இருப்பினும் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து இருதரப்பும் ஒத்துழைக்க ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து எல்லை உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் கூறியிருந்தார்.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா, சீனாவுக்கு இடையே நீடித்துவரும் மோதல் போக்கிற்கு இடையே சீன வெளியுறவு அமைச்சர் இவ்வாறாக கூறியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் மாற்றியது.

அதனால் எல்லைப் பிரச்சினை மீண்டும் பூதாகரமானது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சு கவனம் பெறுகிறது.

கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், பெலாரஸ், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் : எல்லையில் நிலைமை சீராக உள்ளதால் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடப்போம்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட