பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், இன்று முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், உரிய நகல்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து, சரிபார்க்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் : https://www.dge.tn.gov.in/
அதன் அடிப்படையில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதே தளத்தில், அதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தை 2 நகல்கள் பூர்த்தி செய்து இன்று தொடங்கி ஜூன் 3 மாலை 5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.







