2025- CSK: ‘தோனி விளையாடுவார்’.. மொத்தம் 4 பேரை தக்கவைக்க சிஎஸ்கே முடிவு…

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், மகேந்திரசிங் தோனிக்கு, கால் முட்டியில் காயம் இருந்ததால், அவர் விளையாடுவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 17ஆவது சீசனில் தோனி விளையாடினார்.

கால் முட்டி காயம் காரணதாக, தோனி ரெகுலரான இடத்தில் களமிறங்கவில்லை. 7ஆவது இடத்திற்கு பிறகுதான், தோனி களமிறங்கி வந்தார். 14 போட்டிகளில் களமிறங்கிய அவர், 161 ரன்களை பறக்கவிட்டார். ஒரு போட்டியில் 37 ரன்களை குவித்தும் அசத்தினார். கடைசி சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள வாய்ப்பு இருந்தும், அதில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.

இந்நிலையில், 18ஆவது சீசனிலும் தோனி பங்கேற்று விளையாட வேண்டும் என ரசிகர்கள், தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தார்கள். ஆனால், 18ஆவது சீசனில் விளையாடுவது குறித்து, பின்னர் அறிவிக்கிறேன் என தோனி கூறியிருந்தார். இதனால், தோனி 18ஆவது சீசனில் பங்கேற்க வாய்ப்பு குறைவு எனக் கருதப்பட்டது. சமீப நாட்களுக்கு முன், இதுகுறித்து சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதனிடம் கேட்டபோது, ‘’அக்டோபர் 31ஆம் தேதிக்குள், 18ஆவது சீசனில் விளையாடாலாம, இல்லையா என்பதை அறிவிப்பேன் என தோனி என்னிடம் கூறினார்’’ என்றார்.

இந்நிலையில், 18ஆவது சீசனில் தோனி நிச்சயம் பங்கேற்பார் என காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ‘‘தோனி தயாராக இருக்கிறார். இதற்குமேல் எங்களுக்கு என்ன வேண்டும்?’’ என மகிழ்ச்சியில் கூறிவிட்டு சென்றார்.

மகேந்திரசிங் தோனியை, அன்கேப்ட் வீரர் இடத்தில் தக்கவைக்க உள்ளனர். மேலும், சிஎஸ்கேவில் முதல் வீரராக ரவீந்திர ஜடேஜாவை 18 கோடிக்கு தக்கவைக்க உள்ளனர். இரண்டாவது வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டையும் 18 கோடிக்கு தக்கவைக்க உள்ளனர். மதிச பதிரனாவை 14 கோடிக்கும் தக்கவைக்க உள்ளார்கள். மற்ற யாரையும் தக்கவைக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஷிவம் துபே போன்றவர்களை ஆர்டிஎம் கார்ட்களை பயன்படுத்தி தக்கவைக்க உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே 4 வீரர்களை மட்டும் தக்கவைத்தால், அந்த அணிக்கு 2 ஆர்டிஎம் கார்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

2025- CSK: ‘தோனி விளையாடுவார்’.. மொத்தம் 4 பேரை தக்கவைக்க சிஎஸ்கே முடிவு…

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.