204 திட்டங்களை செயல்படுத்தி தி.மு.க. 2 ஆண்டு ஆட்சி : செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்புரை உரை

வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:- தேர்வு எழுதிய மாணவனாக நாங்கள் இருக்கிறோம். 2 ஆண்டு சாதனையை உங்களிடம் சொல்லி மதிப்பெண் போடுங்கள் என காத்திருக்கிறோம். தி.மு.க. 2 ஆண்டு ஆட்சியில் 204 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான். திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் இதில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரத்தினம், நகர்மன்ற துணை தலைவர் மங்களநாயகி, மாவட்ட கவுன்சிலர் சோழன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், உமா செந்தா மரைச்செல்வன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, சுற்றுச்சூழல் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, வக்கீல்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி டி.கே.எஸ். இளங்கோ வன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முடிவில் திருகுமரன் நன்றி கூறினார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

204 திட்டங்களை செயல்படுத்தி தி.மு.க. 2 ஆண்டு ஆட்சி : செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்புரை உரை

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச