சென்னை:
கர்நாடகாவில் வனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த 3 பேரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள், மேலும் தமிழர்கள் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசும் போது குறிப்பிட்டார். மேலும் தமிழக அரசு அந்த குடும்பங்களுக்கு ஏதாவது நிதி உதவி அளிக்க முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், முதல்வர் விஜய்யின் ஆணைக்கு இணங்க நம் வனத்துறை இறந்த 3 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க திட்டமிட்டு, இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறது. இந்த நிதியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தகவல் தெரிவித்தார்.
இதனிடையே 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன், கர்நாடாகவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வண்டும் என வலியுறுத்தினார்.

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,






