அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RCD கருவி – குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மனு…

திருப்பூர் – மின்சார இணைப்புகள் கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக உயிர்காக்கும் சாதனத்தை மின்சார இணைப்புகள் கோரும் கட்டிடத்தில் RCD கருவியை பொருத்துவதை உறுதி செய்ய வேண்டுமென அவிநாசியில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மனு.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கோட்ட மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் அவினாசி மங்கலம் சாலையிலுள்ள அவினாசி கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் திருமதி சுமதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் புதிய மின்சார இணைப்புகளுக்கு மின்கசிவைக் கண்டறியும் பாதுகாப்பு சாதனம் RCD கருவியை கட்டாயமாக பொருத்துவதை உறுதி செய்து விபத்துக்களை தடுக்க உரிய தீர்வுகாண வேண்டுவது சம்பந்தமாக நேரடியாக மனு அளித்தார்.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி அவர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர், அதிகாரிகள் மற்றும் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில செயலாளர் இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், மற்றும் பொது மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஈ.பி.அ.சரவணன் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. திருப்பூர், அவிநாசி பகுதிகளில் மின்கசிவால் அவ்வபோது உயிரிழப்பு மற்றும் மின்சாதனங்கள் பழுதாகும் நிலை தொடா்ந்து நீடிக்கிறது இதைக் கட்டுப்படுத்தும் வகையில் எா்த் லீக்கேஜ் புரோடக்டிவ் டிவைஸ் என்ற சாதனம் மின்நுகா்வோா் அவசியம் பயன்படுத்த வேண்டுமென மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது ஆனால் இது காகித அளவில் மட்டுமே உள்ளது.

மின்சார இணைப்புகள் கேட்டு விண்ணப்பிப்போரின் இடங்களுக்கு அதிகாரிகள் நேரடியாக செல்லும் போது சம்பந்தப்பட்ட இடத்தில் RCD (residual-current device) சாதனம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே மின்சார இணைப்பு வழங்க வேண்டும் இல்லாத பட்சத்தில் கட்டாயமாக மின்சார இணைப்புகளை வழங்கக்கூடாது என ஏற்கனவே மின்சார வாரியம் தெளிவாக விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் பெரும்பாலான இடங்களில் எவ்வித முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் இணைப்புகள் வழங்கப்படுவதே மின் விபத்துகளுக்கு காரணமாகின்றன.

புதிதாக வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெரு விளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற உபயோகத்திற்கான ஒருமுனை, மும்முனை மின்சார இணைப்புகளிலும், தற்காலிக மின்சார இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்சார இணைப்புகள் கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட உயிர்காக்கும் சாதனத்தை மின்சார இணைப்புகள் கோரும் கட்டிடத்தில் RCD (residual-current device) கருவியை நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும் RCD சாதனத்தை பொறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இல்லையேல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பூர் அவிநாசி போன்ற பல்வேறு இடங்களில் விதிகளை பின்பற்றாமல் புதிய மின்சார இணைப்புகள் வழங்கும் போது RCD சாதனத்தை பொருத்தாத இடங்களில் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது இது போன்ற செயல்களால் தான் அவ்வபோது தேவையில்லாத மின் விபத்துக்கள் நடக்கின்றன.

இந்த RCD கருவியை பயன்படுத்துவதன் மூலம் மின்கசிவு ஏற்பட்டால், வீட்டுக்கு வரும் மின்சாரம் தானாக துண்டிக்கப்படும் இதன்மூலம் உயிரிழப்பு, பழுது போன்றவை தடுக்கப்படும்.

மேலும் திருப்பூர் அவிநாசி பகுதிகளில் மின்சார விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டுமென்பது அனைவரின் நோக்கமாகும் இந்த RCD பாதுகாப்பு சாதனத்தை கட்டாயமாக பொருத்து வழிமுறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின்சார பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்கள் ஏற்படுத்தி தேவையில்லாத மின்சார விபத்துகளை
முழுமையாக தடுக்க உரிய தீர்வுகாண வேண்டும்.

எனவே இனிவரும் காலங்களில் திருப்பூர் அவினாசி பகுதிகளிலுள்ள இடங்களில் புதிதாக மின்சார இணைப்புகள் கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக உயிர்காக்கும் சாதனத்தை மின்சார இணைப்புகள் கோரும் கட்டிடத்தில் RCD கருவியை பொருத்துவதை உறுதி செய்து விபத்துக்களை தடுத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

RCD கருவி – குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மனு…

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை