மதுரை, பொது சிவில் சட்டம் நாட்டுக்கு தேவையா? இல்லையா? என்பது பற்றி கருத்து தெரிவிக்க வக்கீல் குழுவிடம் கேட்டிருக்கிறோம். அதுகுறித்த அறிக்கை வந்தவுடன் விரிவான தகவல்கள் தரப்படும். பொது சிவில் சட்டத்தை கைவிடக்கோரி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதி இருப்பது, அவரது கொள்கை. உண்மை வெளிவர வேண்டும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்து, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் வாழ்ந்த இடம் கோடநாடு எஸ்டேட். ஆனால், யாரும் சிந்தித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அங்கு கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. அதைபற்றி உரிய விசாரணை நடத்தி காலம்தாழ்த்தாமல் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. முன்னாள் முதல்-அமைச்சர் வசித்த பங்களாவிலேயே இந்த சம்பவமா ? என மக்கள் கவலையில் உள்ளனர். எனவே, உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். உண்மையான குணம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக்கொள்வோம் என கூறுகிறார்கள். அவர்களுடைய உண்மையான அடிமனதில் இருக்கின்ற குணம், என்னவாக இருக்கிறது என்பதை கட்சி தொண்டர்களும், மக்களும் புரிந்து கொள்வார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






