தஞ்சாவூர்:
மட்டி வாழைப்பழம், செடி புட்டால சேலை, நாமக்கட்டி ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த உணவு, வேளாண், கைவினை மற்றும் கைத்தறி பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, காஞ்சி பட்டு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் பகுதியில் தயாராகும் செடி புட்டா சேலைக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மட்டி வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக கூறினார். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டிக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக கூறினார்.
இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






