1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். (குறள் 138)
விளக்கம்:
நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாகி இம்மை, மறுமை ஆகிய இருமையிலும் இன்பம் விளைவிக்கும். தீயொழுக்கம் எல்லாக் காலத்திலும் துன்பத்தையே தரும்.







