சென்னை:
நாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் சென்னை வேளச்சேரி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் தமிழக அரசு வழக்கறிஞரும், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநில செயலாளருமான டாக்டர்.என்.ஜசக் மூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் அறக்கட்டளை தலைவர் ரகு, துணைத் தலைவர்கள் மில்டன் சுந்தர்ராஜன், ராபர்ட் கென்னடி, செயலாளர் மேத்யூ, பொருளாளர் தாஸ் ஞான பிரபு, சட்ட ஆலோசகர் செல்வம், மாநில அமைப்பு செயலாளர் ஆ.இருதயராஜ், சீனு சைமன், ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் காலை இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






