குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷீபா (40). இவர்களுக்கு கெபின் (15), கிஷான் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பினால் காலை சற்று சாய்த்தவாறு செல்வர். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சரியாகவில்லை. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏசுதாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பின்பு சிறிது நேரம் கழித்து திரும்பி வீட்டுக்கு வந்தார். ஆனால், மனைவி கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு கதவை திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அடுத்தடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 மகன்களை தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இனிய புனித ரமலான் மற்றும் ரம்ஜான்வாழ்த்துக்களை
அனைத்து இஸ்லாம் சகோதர, சகோதரிகளுக்கும் அன்பு குடும்பத்தார்களுக்கும்இனிய புனித ரமலான் மற்றும் ரம்ஜான்வாழ்த்துக்களை






