இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-160, சௌரி தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் (CSR Fund) கீழ், லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 இலட்சம் மதிப்பிலான 2 கலர் டாப்லர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் (Color Doppler Ultrasound machine) மற்றும் 1 மல்டிபாரா மானிட்டர் (Multipara Monitor) ஆகிய மருத்துவ உபகரணங்களை செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஆர்.ராஜசேகர பாண்டி, மண்டலக்குழுத் தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் டி.எம். பிருந்தா ஸ்ரீ, அ.சாலமோன், சி.துர்கா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






