கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்த அவலம்

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்து தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போசம்பள்ளி அருகே கொடமண்டப்பாடியை சேர்ந்தவர் ஷகிலா பானு. இவரது மகன் முபாரக். இவர்களுக்கு சொந்தமாக வீடு அந்த பகுதியில் உள்ளது. இவர்கள் கடந்த 2018ம் ஆண்டு சிவன் என்பவரிடம் வீட்டு மனையை அடகு வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இதற்கிடையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு முடக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் 2 ஆண்டுகள் வட்டிக்கு பணம் கட்டவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வட்டிக்கு பணம் கொடுத்த சிவன், 10 பேருடன் ஷகிலா வீட்டுக்கு சென்றார். அங்கு வட்டி கொடுக்கும்படி கேட்டார். அவர் முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த சிவன், பொக்லைன் இயந்திரம் மூலம் ஷகிலா பானுவின் வீட்டை இடித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டை இடித்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்த அவலம்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு