உதக மண்டல கூட்டுறவு பண்டக சாலையின் ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், கே.505 உதக மண்டலம் கூட்டுறவு பண்டக சாலை, தலைவர் ஆட்குறைப்பு என்ற பெயரால் கே.பி. அமுதவல்லி, சி.ராமசந்திரன், எஸ்.அந்தோணிதாஸ் ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்துவிட்டு 4 புதிய பணியாளர்கள் தேவைபட்டியல் கொடுத்து அறிவிப்பு செய்துள்ளதை கண்டித்தும் கே.505 பண்டக சாலை மேலாளர் பணியாளர்களை மிரட்டும் தோரணையில் நடந்து கொள்வதையும், கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க சொல்லி வற்புறுத்துவதையும், பெண் பணியாளர்கள் மீது வெளியில் சொல்ல இயலாத நிலையினை ஏற்படுத்தி அதன் மூலம் பழிவாங்கும் செயலை கண்டித்தும், நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும் மேலாளரின் நடவடிக்கைகளை எடுத்துரைக்கப்பட்டும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விசாகா கமிட்டி ஏற்படுத்தி விசாரணை நடைபெறாமல் இதுவரை மவுனமாக இருந்து வருவதை கண்டித்தும் நீலகிரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பி.தினேஷ்குமார் வரவேற்றார். வி.எட்வின், சி.பசுபதி, டி.கணேசன், எல்.சசிகுமார், சி.காளிமுத்து, கே.யுவராஜ், எஸ்.கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் எம்.சங்கர், ஆர்.சதாசிவம், டி.தங்கபூமி, எம்.அண்ணாதுரை, வி.கே.சுவாமிநாதன் ஆகியோர் கண்ட உரையாற்றினர்.
மேலும் மாவட்ட நிர்வாகிகள் வி.கே.காளியப்பன், கே.செல்வராஜ், டி.ராமு, எம்.ராதிகா, ஆர்.நாகமாணிக்கம், கே.குமார், வி.திருப்பதி, என்.ரவி, ஏ.கணேசன், கே.பிரகாஷ், எஸ்.சீனு சரவணன், கே.உமாபதி, கே.முருகன், எம்.லோகியா, வி.டி.பன்னீர்செல்வம், எம்.விநாயகமூர்த்தி, டி.ராஜ்ஜீவன், எஸ்.விஜயசாரதி, டி.ராஜா, டி.சண்முகம் சுந்தரம், ஆர்.பொன்னுசாமி, கே.பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நீலகிரி மாவட்ட இணை அமைப்பாளர் சி.ராமசந்திரன் நன்றி கூறினார்.
பின்னர் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதக மண்டல கூட்டுறவு பண்டக சாலையின் ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.