சைதாப்பேட்டையில் போதை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது

சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் போதை பொருட்கள் வைத்திருந்ததாக ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தீவிர போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மேற்கு சைதாப்பேட்டை பஸ்நிலையம் அருகே சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடியை சேர்ந்த அருள் (வயது 22) என்பதும், சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சரண் (19) என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சைதாப்பேட்டை குமரன் நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1014 போதை மாத்திரைகள், 12 போதை ஊசிகள், 5 ஹான்ஸ் ஒரு பாக்கெட் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சைதாப்பேட்டையில் போதை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச