புதுடெல்லி:
2,000 ரூபாய் நோட்டை மாற்ற கடைசி தேதி செப்டம்பர் 30 என்ற ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று முதல் உயர்மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
ரூ.2,000 கரன்சி நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு செப்டம்பர் 30, 2023 அன்று கடைசித் தேதி என ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்தது. எனவே ரூ. 2,000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள், இன்று (2023, செப்டம்பர் 30 சனிக்கிழமை) முதல் புழக்கத்தில் இருக்காது. அது மற்றொரு காகிதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என ரிசர்வ் வங்கி முதலில் நிர்ணயித்தது. 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.2,000 ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் உள்ள இந்த நாணயத் தாள்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக மத்திய வங்கி செப்டம்பர் 1 ஆம் தேதி தெரிவித்தது. ஆகஸ்ட் 31-ம் தேதி வர்த்தகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் ரூ.0.24 லட்சம் கோடியாக இருந்தது. 3.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் இருந்த 88 சதவிகிதம், ஜூலை 31-ம் தேதிக்குள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன.
ரிசர்வ் வங்கி மே மாதம் அதிக மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற மத்திய வங்கி முடிவு செய்ததில் இருந்து கடந்த மாத தொடக்கம் வரை ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 93 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியதாக ஆர்பிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





