அரசு விடுதி மாணவர்கள் மறியல் – தரமற்ற உணவு வழங்குவதாக புகார்….

திருச்சி:
திருச்சி கிராப்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதி உள்ளது. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் 120 பேர் தங்கி உள்ளனர்.

இந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வழங்கிய உணவும் தர மற்று இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த உணவை பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, திருச்சி – மதுரை சாலையில் கிராப்பட்டி மேம் பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து எடமலைப்பட்டி புதூர் காவல் ஆய்வாளர் விஜய பாஸ்கர் மற்றும் போலீஸார் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், திடீரென உணவுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்ல முயன்றனர்.

போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி, இந்தப் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் காரணமாக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு விடுதி மாணவர்கள் மறியல் – தரமற்ற உணவு வழங்குவதாக புகார்….

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.