சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படவில்லை. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை கிண்டி ஆலந்துார் வழியாக செல்லும் பயணிகள் கடும் அவதி. ஒரு மண நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக மெட்ரோ சேவையானது சனிக்கிழமை அட்டவணையின்படி
இயக்கப்படும் என்பதனை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மெட்ரோ ரயிலை பயண்படுத்துபவர்கள் முக்கிய காரணமின்றி வர வேண்டாம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.






