கடலூர்:
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு நெய்வேலி நகரத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கடலூர் தலைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு தினமான கருப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் மேம்பாட்டு கழக தலைவர் இருதயம் வல்லரசு கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பிஷப் பால் தாமஸ், மக்கள் மேம்பாட்டு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், அரிதாஸ், சுப்பையா, தனி செயலாளர் ஜோசப், இளைஞரணி செயலர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 2024 வெறும் நாடாளுமன்ற தேர்தல் அல்ல. சமூகநீதிக்கும் – சனாதனத்திற்கும் நடத்தப்படும் தேர்தல் யுத்தம் இதில் அனைத்து சிறுபான்மையின மக்களும் இணைந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் . அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். மதசார்பற்ற இந்திய நாட்டில் அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்க வேண்டும்.
மத பாகுபாடு காட்டி இட ஒதுக்கீட்டை பறிக்க கூடாது. சமூகநீதியை பாதுகாக்க வேண்டும். முக்கியமாக சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





