மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அப்பாவு நகர், பன்னீர்செல்வம் நகர், காரணிஸ்வரர் நகர், ஜாபகர்கான் பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், மடுவின்கரை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் அப்பல்லோ, எம்ஜிஎம், காவேரி, ஸ்ரீராமச்சந்திரா, கற்பக விநாயகா, பில்ரோத் ஆகிய 7 தனியார் மருத்துவமனைகள் பங்கேற்கும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் ஜெ. சங்குமணி, மண்டல குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






