5 வது முறையாக உலக சாதனை நிகழ்ச்சி நடத்தி அசத்திய குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம்….!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மஹாலில் குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தென்னிலை கதிர் பத்திரிகையின் ஆசிரியரும், ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான வி.எம்.தமிழன் வடிவேல், தொழிலதிபர் டாக்டர்.VRS. ஸ்ரீதர் BE,LLB, P.தங்கவேல் MBA,காங்கிரஸ் கட்சியின் IT பிரிவு மாநில செயலாளர் முருகன், ஸ்ரீ சாய் இல்லம் அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயலட்சுமி குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உலக சாதனை புரிந்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி கௌரவித்தனர்.இந்த உலக சாதனை நிகழ்ச்சியானது நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாவது முறையாக நடைப்பெற்றது.இந்த சிறப்பு விழாவினை குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.சித்ரா குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் பீ .செலின் மாநில.து.தலைவர் மற்றும் நிர்வாகிகளான உஷாராணி, சுகன்யா, கௌரி,பைரவி, அனுஷ்யா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமான சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமல்லாது கேரளா மாநிலத்தில் இருந்தும் அழகு கலை நிபுணர்கள் கலந்து உலக சாதனை புரிந்து சான்றிதழ்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






