போதைபொருள் விற்பனை செய்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கைது !

வடசென்னையில் முக்கிய பகுதியான வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு பகுதிகளில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதை பொருள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வடசென்னையின் முக்கிய பகுதிகளான புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, வியாசர்பாடி, கொடுங்கையூர்  ஆகிய பகுதிகளில் சமீப காலமாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.  வலி நிவாரணி மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை  மாத்திரைகளை தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால் போதை தலைக்கேறும். இதனால், அந்த பகுதிகளில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்களும் ஏற்படுகின்றன.

இந்த போதை பாத்திரைகளை உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி, கல்லூரி, பள்ளி மாணாக்கர்களும் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. மேலும் பல கடைகளில் மீண்டும் போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையும் கொடிகட்டி பறக்கின்றன.  இதை விற்பனை செய்யும் நபர்கள் அரசியல் பின்புலத்துடன் இருப்பதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றன.

ஏற்கனவே   புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக  வந்த புகாரின் பேரில், ஓட்டேரி பகுதியில் சிலரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, வியாசர்பாடி பகுதியில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.எம்கேபி.நகர் காவல்துறைக்கு கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, எம்கேபி நகர் 19வது மத்திய குறுக்குத் தெருவை சேர்ந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து,  போதை மாத்திரைகளை விற்பனை செய்த அந்த பகுதியைச் சேர்ந்த தர்ஷன் என்ற இளைஞனையும், கொடுங்கையூர் எழில்நகர் பகுதியைச்சேர்ந்த அப்துல் மஜீத்  என்ற இளைஞனையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

போதைபொருள் விற்பனை செய்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கைது !

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்