குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாளை மகாராஷ்டிராவின் நாக்பூருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
தமது ஒருநாள் பயணத்தின்போது, நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரிகள் அகாடமியில் (NADT) நடைபெறும் இந்திய வருவாய்ப் பணி 76வது பயிற்சி (IRS) அதிகாரிகள் தொகுப்பின் பயிற்சி நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொள்கிறார்.